Skip to content
Home » கூல்ரிங்ஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி….

கூல்ரிங்ஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி….

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அமீர். இவரது மகன் முகமது பீர்மைதீன்(12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பீர்மைதீன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குளிர்பானம் என தவறுதலாக நினைத்து குடித்துள்ளார். இதனை கண்ட பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முகமது பீர்மைதீன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை அமீர் அளித்த புகாரின் பேரில் கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!