Skip to content
Home » ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

ஆசிய கோப்பை இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதல்…

  • by Senthil

2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த  அதிகாரபூர்வமாக றிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா இன்று வெளியிட்டார்… 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது. 6 அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் உள்ளன. எனவே, இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் மோதவுள்ளன. இந்த போட்டித் தொடர் எங்கு நடைபெறும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. 2023ம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்யாது என ஜெய் ஷா கருத்து தெரிவித்தார் இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது. 6 அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் உள்ளன. எனவே, இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் மோதவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!