Skip to content
Home » சைக்கிள் சின்னம் எங்களுக்கே…தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜி.கே.வாசன் வழக்கு..

சைக்கிள் சின்னம் எங்களுக்கே…தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜி.கே.வாசன் வழக்கு..

கடந்த 1996-ம் ஆண்டு மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் கட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் அப்போது ஒதுக்கியது. ஜி.கே.மூப்பனார் மறைவுக்கு பிறகு தற்போது ஜி.கே.வாசன், தமாகா தலைவராக உள்ளார். இதனிடையே தொடர் தோல்வி மற்றும் வாக்கு வங்கி சரிவு போன்ற காரணங்களால், சைக்கிள் சின்னம் திரும்பப் பெறப்பட்டது.

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார் வாசன். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு மறு விசாரணையை 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!