Skip to content
Home » வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

தமிழ்நாட்டில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியிருப்பதாலும், நிலப்பகுதிகளில் ஈரப்பதத்தின் குவிவும் அதிகரித்திருப்பதாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், வேலூர், திருப்பத்தூர் உள்பட உள்மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கூறி உள்ளது.இதன் தொடர்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) முதல் 6-ந் தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது; பின்னர், 6-ந் தேதி தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அல்லது 8-ந் தேதி (திங்கட்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். இது அடுத்து தீவிர தாழ்வு பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறுமா? என்பது குறித்த அடுத்தகட்ட நகர்வு பற்றி ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!