Skip to content
Home » அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு 38% இருந்து 42% உயர்கிறது.  ஏப்ரல் 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கும் இது  பொருந்தும்

இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அகவிலைப்படி உயர்வால் , சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!