Skip to content
Home » டூவீலர் மோதி அரசு பஸ் டிரைவர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

டூவீலர் மோதி அரசு பஸ் டிரைவர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Senthil

திருச்சி அருகே உள்ள முசிறி பைத்தம்பாறை பகுதியை சேர்ந்தவர் திருமலை இவரது மகன் நேசகுமார் (48) . இவர் துவாக்குடி டெப்போவில் அரசு பஸ்ஸில் டிரைவராக கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு பஸ்சை நேசகுமார் துவாக்குடி அடுத்த தேநீர் பட்டிக்கு எடுத்து வரும் பொழுது 9.30 மணியளவில் காலை உணவு  சாப்பிடுவதற்காக துவாக்குடி பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்திவிட்டு நேசகுமாரும் கண்டக்டர் செந்தில்குமாரும் துவாக்குடி பஸ் ஸ்டாண்டிலிருந்து  எதிரே உள்ள டிபன் கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க ஓரமாக நின்றுள்ளனர். அப்போது திருச்சியிலிருந்து

தஞ்சை நோக்கி அதி வேகமாக வந்த பைக் நேசகுமார் மீது மோதியது. இதில் நேசக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த லால்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் 32 படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில்  முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் நேசகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!