தீபாவளி பண்டிகையானது வரும் 12-ந் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக தங்களது குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர். இதற்காக திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி அருகில் உள்ள மாவட்டங்களான தஞ்சை, பெரம்பலூர்,
புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தருகின்றனர். திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை தெப்பக்குளம், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி பகுதிகள் திருச்சி மாநகரத்தின் முக்கிய பகுதியாக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.