தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாணவிகள் மிருதுளா, ஜெயஸ்ரீ உயிரிழந்த நிலையில், இன்று ஹரிஷ்குமார் என்ற மாணவர் உயிரிழந்தார். தற்போது வரை 3 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
