Skip to content
Home » ஒற்றை யானை அருகே சென்று போதை ஆசாமி சேட்டை…

ஒற்றை யானை அருகே சென்று போதை ஆசாமி சேட்டை…

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாற்றுப் படுகையையொட்டி வசிக்கும் யானைகள் மெயின்ரோட்டில் அவ்வப்போது திரிவது வழக்கம், இதன் அடிப்படையில் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்களில் இருந்து இறங்கவும் கூடாது என வனத்துறை சார்பில் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒகேனக்கல் அருகே முண்டச்சிப் பள்ளம் என்ற பகுதியில் சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று சாலையோரம் நடமாடி வருகிறது. இந்த யானையை அவ்வழியே வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர். இந்நிலையில், நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வேனில் வந்த போதை ஆசாமி  ஒற்றை யானையை பார்த்ததும் வேனில் இருந்து இறங்கியுள்ளார். பின்னர் யானைக்கு வெகு அருகில் நடந்து சென்று வணங்கியுள்ளார். அதன்பிறகு, யானைக்கு முதுகு காட்டியபடி நின்று கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இவரது இந்த செய்கைகளின்போது அந்த ஒற்றை யானை மண்ணை காலால் உதைத்து சிதற விட்டும், செடிகளை ஆக்ரோஷமாக வளைத்து மிதித்தும் பிளிறுகிறது.  ஆனாலும் போதை ஆசாமி  யானை அருகில் சென்று விட்டு வேனுக்கு திரும்புகிறார். இந்த போதை ஆசாமியின் இந்த சைகைகளை அவருடன் வந்தவர்கள் வீடியோவாக பதிவாக்கி வைரலாக்கியுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!