Skip to content
Home » செல்போன்கள் மூலம் பேரிடர் கால எச்சரிக்கை…. மயிலாடுதுறை கலெக்டர் விளக்கம்

செல்போன்கள் மூலம் பேரிடர் கால எச்சரிக்கை…. மயிலாடுதுறை கலெக்டர் விளக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி  இன்று  (அக்.20) மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இச்சோதனை நடைபெறுகிறது.எனவே இதற்கு பொதுமக்கள் எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம், பதற்றமடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!