Skip to content
Home » துரை வைகோவை ஆதரித்து….. திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரசாரம்

துரை வைகோவை ஆதரித்து….. திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் பிரசாரம்

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதியில்  திமுக கூட்டணியில்  மதிமுக போட்டியிடுகிறது.   வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு  தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  துரை வைகோவை ஆதரித்து  திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கடந்த  14 ம் தேதி முதல்16 வரை 50 இடங்களில் தெருமுனை  பிரசாரம்  செய்து   தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். மணிகண்டம் ஒன்றியத்தில் செயலாளர் முருகன் தலைமையில் 20 இடங்களிலும் மேற்கு பகுதியில் செயலாளர் சுரேஷ் முத்துசாமி தலைமையில் 10 இடங்களிலும்அபிஷேகபுரம் பகுதியில் செயலாளர் அஞ்சுகம் தலைமையில் ஐந்து இடங்களிலும் பிரசாரம் நடந்தது.

திருவரங்கம்செயலாளர் பார்வதி தலைமையில் ஐந்து இடங்களிலும்கிழக்கு பகுதி செயலாளர் அபுதாஹிர் தலைமையில் 5 இடங்களிலும்பொன்மலை பகுதி செயலாளர் ராஜா தலைமையில் ஐந்து இடங்களிலும்அந்தநல்லூர் ஒன்றியத்தில் செயலாளர். ராஜாங்கம் தலைமையில் ஐந்து இடங்களிலும் ஏப்ரல் 16 வரை நடைபெறுகிறது.
இந்த பிரசார கூட்டங்களில் மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் ,கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, துணைச் செயலாளர் செல்வகுமார் ,பொருளாளர் சண்முகம் ,இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட தலைவர் நடராஜா, விவசாய சங்க தலைவர் சிவசூரியன் ,மாதர் சம்மேளன மாநகர தலைவர் ஆயிஷா ,தூய்மைப் பணி சங்க பொறுப்பாளர் பிரகாஷ்  மற்றும் ஏராளமானோர் பங்கேற்று  ஆதரவு திரட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!