Skip to content
Home » மகளை கொன்றுவிட்டு …. ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் தற்கொலை..

மகளை கொன்றுவிட்டு …. ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் தற்கொலை..

  • by Senthil

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி 13வது வார்டு திமுக கவுன்சிலர்  தேவிப்பிரியா(46). இவரது கணவர் அருண் லால் (53). இவர்களுக்கு  2 மகள்கள்.  மூத்த மகள் ரித்திகா(21)பெங்களூருவில்   ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். 2வது மகள் மோனிஷா(17) ராசிபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

தேவிப்பிரியா  குடும்பத்தோடு மாடி வீட்டில்  வசித்து வந்தார். கீழ் தளத்தில் தேவிப்பிரியாவின் தாயார் சுசீலா வசித்து வந்தார். இன்று காலை  தேவிப்பிரியா வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லை. காலை 10 மணி வரை ஆள் சத்தமே கேட்காததால் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீட்டுக்குள்  கவுன்சிலரும், அவரது கணவரும்  மின்விசிறியில் தூக்கிட்டு  பிணமாக தொங்கினர்.

இது குறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இளைய மகள் மோனிஷாவும் இறந்து கிடந்தார். அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மகளை கொன்று விட்டு கணவனும், மனைவியும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடன் பிரச்னை காரணமாக இவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து மூத்த மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ராசிபுரம் புறப்பட்டு வருகிறார். அவர் வந்த பிறகு தான் குடும்பமே தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவரும். 3 உடல்களையும் போலீசார் கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேவிப்பிரியாவின் தாயார் சுசீலாவும் முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

tn

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!