நடிகைகள் குறித்த போலியான தகவல்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து ஆனந்தம் கொள்ள வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகை தமன்னா வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விப்பதே ஒரு நடிகையாக தனக்கிருக்கும் மிக முக்கிய பொறுப்பு என்று குறிப்பிட்டார். எனவே, தங்களை மகிழ்விக்கும் நடிகைகளை ரசிகர்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமே தவிர, வீணாக விமர்சிக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
போலி புகைப்படங்களை பரப்ப வேண்டாம்: நடிகை தமன்னா
