தென் மாநிலங்கள் மற்றும் OBC, SC மக்களின் அதிகாரத்தை பறிப்பதே தொகுதி மறுவரையறை மசோதாவின் நோக்கம் என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். லோக்சபாவில் பேசிய அவர், மகளிர் மசோதா என்ற பெயரில் மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிடுவதாகவும், நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் விமர்சித்தார். தென் மாநிலங்களே கவலையே வேண்டாம், தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது எனவும் கூறினார்.
