Skip to content
Home » திருச்சியில் வாகனப்பேரணி நடத்தி இறுதிகட்ட ஆதரவு திரட்டிய துரை வைகோ…..

திருச்சியில் வாகனப்பேரணி நடத்தி இறுதிகட்ட ஆதரவு திரட்டிய துரை வைகோ…..

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. எனவே இன்று  சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்  வேட்பாளர்கள்  காலை முதல் மாலை வரை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் மதிமுக வேட்பாளர்  துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை புதுக்கோட்டையில் பிசராரம் தொடங்கினார்.

பிற்பகலில் அவர் திருச்சி  மாநகரில் வாகனப்பேரணி நடத்தி ஆதரவு திரட்டினார்.  மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலை முன்பிருந்த   பிரசாரத்தை தொடங்கிய துரை வைகோ திறந்த வாகனத்தில் நின்றபடி  திருச்சி மாநகரம் முழுவதும் தீப்பெட்டி சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அவருடன்  மேயர் அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

ஏராளமான இளைஞர்கள் டூவீலரில்  வேட்பாளருடன் சென்று   போடுங்கம்மா ஓட்டு, தீப்பெட்டிய பாத்து என கோஷம் போட்டபடி வாக்கு திரட்டினர்.  மாலை 6 மணிக்கு  காந்தி மார்க்கெட் அருகில் துரை வைகோ பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!