Skip to content
Home » புதுக்கோட்டையில் தேர்தல் ஏற்பாடுகள்….. கலெக்டர்கள் ஆய்வு

புதுக்கோட்டையில் தேர்தல் ஏற்பாடுகள்….. கலெக்டர்கள் ஆய்வு

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் இன்று திருச்சி  தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்,  கலெக்டருமான  பிரதீப் குமார் , புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் ஆய்வு நடத்தினர்.   புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு தேவையான  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போதுமான அளவு உள்ளதா, அவை சரியான நிலையில் உள்ளதா

என  கலெக்டர்கள் ஆய்வு நடத்தினர்.  புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பூத்களில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும்  திருச்சி கலெக்டர், புதுகை கலெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.  அப்போது  புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தேர்தல் பணி தாசில்தார்கள்,  மக்கள் தொடர்பு அதிகாரி பிரேமலதா ஆகியோரும் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!