Skip to content
Home » சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாறையாக செயல்படுகிறது…. முத்தரசன் குற்றச்சாட்டு…

சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாறையாக செயல்படுகிறது…. முத்தரசன் குற்றச்சாட்டு…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் பேசியதாவது:-

எடப்பாடி பழனிசாமி பாஜகவை விட்டு விலகி விட்டதாக கூறுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி யாரை ஆதரிப்பார். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை ஆதரிப்பாரா? அல்லது மோடியை ஆதரிப்பாரா? இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றால் சத்தியமாக மோடியை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்ல வேண்டும். கொள்கைக்காக

போராடுகின்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். சிதம்பரம் தொகுதியில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து தெரியாமல் இருக்கிறோம். இதேபோன்று பல கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. தேர்தல் ஆணையம் எல்லோருக்கும் சம வாய்ப்பை அளிக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம்  மோடியின் கைப் பாவையாக செயல்படுகிறது. எங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கினாலும் சரி, ஒதுக்காவிட்டாலும் சரி திருமாவளவன் தான் இங்கு வெற்றி பெறுவார். சின்னத்தை முடக்குவதன் மூலமாக எதிரிகளை வெற்றி பெறலாம் என்று நீங்கள் கனவு காண்பீர்கள் ஆனால் தோற்றுப் போவீர்கள் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!