Skip to content
Home » மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

  • by Senthil

தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம். ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ டிரைவர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (வயது 47), மகள்ஆதிரா (வயது 23) மற்றும் மகன் அஸ்வின் (வயது 19) ஆகிய மூவரும் நேற்று (3-10-2023) அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். தனது குடும்பத்தினரை இழந்து வாடும் டிரைவர் சோம்ராஜ், மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!