Skip to content
Home » என் ஓட்டு! என் உரிமை! செல்பி எடுத்து தேர்தல் விழிப்புணர்வு …

என் ஓட்டு! என் உரிமை! செல்பி எடுத்து தேர்தல் விழிப்புணர்வு …

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் -2024 தொடர்பான “தேர்தல் பருவம்! தேசத்தின் பெருமிதம்!!” விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அரசு அலுவலர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம்! தேசத்தின் பெருமிதம்!!” என்ற பேனருடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றும் ஜனநாயகத்தை வலிமை படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பருவம்! தேசத்தின் பெருமிதம்!!, என் ஓட்டு! என் உரிமை செல்பி கார்னரினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா துவக்கி வைத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், அரசு அலுவலர்கள் என் ஓட்டு! என் உரிமை செல்பி கார்னரில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!