நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங். இவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதி வைத்த கடிதங்களில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன், நாங்குனேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மற்றும் பல தொழில் அதிபர்கள் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். அதன்படி சுமார் 30 பேர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு ரூபி மனோகரனை வரவழைத்த போலீசார் அங்கு அவரிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பல்வேறு கேள்விகளை கேட்டு அவரிடம் பதிலை பெற்று வருகிறார்கள். அவர் அளிக்கும் பதில்கள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுபோல இந்த வழக்கில் தொடர்புடைய ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.