Skip to content
Home » இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

  • by Senthil

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தனியார் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்பொழுது தமிழ்நாட்டில் இதுவரை 71 தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 130க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 3000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என கூறினார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று அதிமுக கூட்டணியில் அதிமுகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையிலும் பாஜக தேர்தலில் போட்டியிடுவதா அதிமுகவிற்கு ஆதரவளிப்பதா அல்லது தேர்தலை தவிர்ப்பதா என உறுதியாக தெரியாத நிலையிலும் பாமக தேர்தலில் இருந்து விலகிக் கொண்டதன் மூலம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளை இல்லை என்ற நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் எனவும் கூறினார் இந்தியாவை வல்லரசாக்குகிறோம் என்று பாஜக கூறி வருகிறது ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சி பணத்தின் வீழ்ச்சி வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!