Skip to content
Home » பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

பேஸ்புக் காதலியுடன் தகராறு… போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…

சேலம் அருகே பேஸ்புக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சுண்டமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(25). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இரண்டு நாட்கள் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் அவரது உடலை மீட்டு இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், நவீன்குமார் கோவை பகுதியை சேர்ந்த பெண்ணை பேஸ்புக் மூலம் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. காதலியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நவீன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர் காதலித்த பெண் யார்? என்று குடும்பத்தினருக்கு கூட தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!