Skip to content
Home » தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

தந்தையை அடித்துக்கொன்ற மனநல பாதிக்கப்பட்ட மகன்….பரபரப்பு சம்பவம்..

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மங்கலம் காலனி தெருவில் வசிப்பவர்கள் செல்வராஜ்-மணிமொழி தம்பதியினர், இவர்களின் 23 வயதுடைய மகன் அசோக்ராஜ் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் இவர் கடந்த மூன்று மாதங்களாக மாத்திரை சாப்பிட ஆதலால் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அசோக்ராஜ் நேற்றிரவு தனது தாயை தாக்கியதால் அவர் தனது உறவினர் வீட்டிற்கு உறங்க சென்றுள்ளார். வீட்டில் தந்தை செல்வராஜ் மட்டும் தனியாக இருந்துள்ளார்.இந்த நிலையில் குச்சியால் தனது தந்தையின் தலையில் குச்சியால் தாக்கியுள்ளார். இதனால் தலையில் காயமடைந்த செல்வராஜ் உயரிழிந்தார். காலை மணி மொழி வீட்டிற்கு வந்து பார்த்த போது செல்வராஜ் காயமடைந்த நிலையில் கிடந்துள்ளார். அதனை கண்ட மணி மொழி குன்னம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!