Skip to content
Home » திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

  • by Senthil

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம்  கங்கா நகர் செல்லும்   ஹம்சாபாத்   வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று மதியம் குஜராத் மாநிலம்  வல்சாத் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது,  இன்ஜினுக்கு பின்னால் உள்ள 2 பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக  ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக  இறக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது. அதன் பின்னர் ரயில்வே அதிகாரிகள் வந்து  தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ரயில் புறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!