Skip to content

கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. குடோன் அருகே தனியாக கொட்டி வைக்கப்பட்டிருந்த வேஸ்டேஜ் பிளாஸ்டிக் கழிவுகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த

தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்திலேயே பற்றி எரிந்த தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!