தமிழ்நாடு, புதுவையில் வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. நாளை மறுதினத்துடன் பிரசாரம் ஓய்கிறது. எனவே தமிழகம், புதுவையில் அனல் பறக்கும் பிரசாரம் நடக்கிறது. கேரளாவில் 2ம் கட்ட தேர்தல் நடக்கிறது. அங்குள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு இன்று ராகுல் காந்தி வீதிவீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.
இதற்காக ராகுல் காந்தி மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா தாளூர் வந்தார். அங்கு ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் ராகுல் ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
. அப்போது அங்கு இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர்.சுமார் 10 நிமிடங்கள் வரை இந்த சோதனை நீடித்தது. ஹெலிகாப்டரில் இருந்த பை உள்பட அனைத்தையும் ஒன்று விடாமல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணமோ பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். அதைத்தொடர்ந்து ராகுல் வயநாடு புறப்பட்டு சென்றார்.