Skip to content
Home » திருச்சி அருகே விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப்பள்ளி பயிற்சி….

திருச்சி அருகே விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப்பள்ளி பயிற்சி….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நடைபெற்றது. இதில் துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி வரவேற்பு உரை ஆற்றினார். மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி தலைமை ஏற்று நடப்பு நிதி ஆண்டில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினார். குமுளூர் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் சிவரஞ்சனி மண்ணின் தன்மை, மண் வளம்

குறித்தும், மண் வளம் பாதுகாப்பு குறித்தும் உரை ஆற்றினார். வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!