Skip to content
Home » மாணவர்களுக்கு இலவச கல்வி தொடர்ந்து வழங்குவேன்…. பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

மாணவர்களுக்கு இலவச கல்வி தொடர்ந்து வழங்குவேன்…. பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

  • by Senthil

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் போட்டியிடும் ஐ.ஜே.கே கட்சியின் வேட்பாளர்  பாரிவேந்தர்   பெரம்பலூர் அடுத்த செங்குணம் ,சிறுவாச்சூர், வேலூர், அம்மாபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட   கிராமங்களில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சிறுவாச்சூர் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பாரிவேந்தருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அப்போது  வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது: சிறுவாச்சூர் மேம்பாலம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்ததை நீங்கள் என்னிடம் கோரிக்கை வைத்தீர்கள். அதனை நான் உடனே  முயற்சி எடுத்து விரைவாக பணிகளை நிறைவு செய்தேன் .தற்போது பொதுமக்கள் எந்த ஒரு சிரமமுமின்றி  அந்த  பாலத்தில்பயணித்து வருகிறீர்கள். உங்கள் கோரிக்கைகளை மன நிறைவாக செய்துள்ளேன் என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருகின்றேன் .இது மேலும் தொடரும்.
100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து கூலி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தில் வேட்பாளருடன் பாஜக, ஐஜேகே நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!