புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. சங்கத் தலைவர் கண.மோகன் ராஜா தலைமை வகித்தார்.அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஏஆர். முகமது அப்துல்லா வரவேற்றார். நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் புதுக்கோட்டை ச.பாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தார். சுபலட்சுமி முகாம் மருத்துவராக இருந்தார். முகாமில் 300 பேர் பயன் பெற்றனர்.

