சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி இரவு 1.30 அளவில் திருச்சி திருவானைக்காவல் பாலத்தை கடந்த போது அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே பாலத்தை கடக்க முற்ப்பட்ட போது எதிர்பாராத விதமாக ரயில் அடிபட்டு
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.