Skip to content
Home » பெண்கள்- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

பெண்கள்- பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஃபோனிக்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது ஜெயங்கொண்டம் காவல் நிலையம் அருகில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை காவல் ஆய்வாளர் ராமராஜன் தொடங்கி வைத்தார் மகளிரை போற்றுவோம் மகளிர் தினத்தை கொண்டாடுவோம் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண்

குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் என்பது உள்ளிட்ட பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டனஇதில் அன்னை தெரசா கல்வி நிறுவன தலைவர் முத்துக்குமரன் மாடர்ன் கல்வி நிறுவன துணைத் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!