Skip to content
Home » திருச்சி விமான நிலையத்தில்…..1கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில்…..1கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  இந்த விமானத்தில் வந்த ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்,  அந்த பயணியை தனியே அழைத்து சோதனை போட்டனர்.

அப்போது அவர் மலக்குடலில்  பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.  நவீன ட்ரிட்மெண்ட் மூலம் அதிகாரிகள் அந்த தங்கத்தை வெளியே எடுத்தனர். அதில் ஒரு கிலோ 61 கிராம்  தங்கம் இருந்தது. அது 24 காரட் மதிப்புடையது. இதன் மதிப்பு ரூ.66 லட்சத்து 68 ஆயிரம்.

அந்த தங்கத்தை  பறிமுதல் செய்த  அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!