திருச்சி அடுத்த நம்பர் 1 டோல்கேட்டில் நேற்று பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
மக்களவை தேர்தலில் பிஜேபி எங்கெங்கு வேட்பாளரை நிறுத்துகிறதோ அங்கெல்லாம் ஓட்டு கேட்க வருவேன் எனக்கென்று ஓட்டு கேட்க மாட்டேன். சர்வதேச அளவில் மிகப்பெரிய ஆளுமையாக இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான்.புதிய டிஜிபி வந்திருக்கிறார் மாற்றம் வரும் என நினைத்தேன் ஏமாந்து போனேன் . 2024ல் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக வரும் .
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது,பொது சிவில் சட்டம் என்பது அனைவருக்கும் ஒரே சட்டம் என்றும், ஒரு வீட்டில் இரண்டு சட்டம் இருக்க முடியாது மத்திய அரசினுடைய வழிகாட்டுதலின்படி ஆளுநர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்’ என்றார்.