தமிழகத்தில் வரும் 2024-2025ம் கல்வி ஆண்டுக்கு அரசுப் பள்ளிகளில் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கோரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பள்ளிக்கல்வித் துறை செய்துவருகிறது. அரசு பள்ளியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். தமிழகத்தில் மொத்தமாக தமிழக அரசு பள்ளியில்
வரும் கல்வியாண்டில் 2024-205ம் ஆண்டில் 80 ஆயிரத்து 76 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு ஆரம்பள்ளியில் 46 ஆயிரத்து 586 சிறுவர்களும், நடுநிலைப்பள்ளியில் 21853 பேர் என 36 மாவட்டத்தில் மொத்தமாக 68 ஆயிரத்து 439 பேர் சேர்ந்துள்ளனர். மேலும் உயர்நிலை பள்ளியில் 38 மாவட்டத்திலும் 6ஆயிரத்து 287 பேரும், மேல்நிலைப் பள்ளியில் 5 ஆயிரத்து 350 பேரும், தமிழகத்தில் 38 மாவட்டத்திலும் மொத்தமாக 80 ஆயிரத்து 076 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.