Skip to content
Home » நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

தஞ்சை பூக்கார தெரு மேற்கு லாயத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 49). சம்பவத்தன்று இவரது மகன் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்தார். இதற்காக அவர் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை ஒரமாக கழற்றி வைத்துவிட்டு நீச்சல் பயிற்சி மேற்கொண்டார்.
பயிற்சி முடிந்து வந்து பார்க்கும்போது செயினை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சாமிநாதன் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!