Skip to content
Home » கைகளில் வர்ணம் பூசி தேசிய கொடி உருவாக்கிய பள்ளி மாணவ-மாணவிகள்…

கைகளில் வர்ணம் பூசி தேசிய கொடி உருவாக்கிய பள்ளி மாணவ-மாணவிகள்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று நான்கு வயதுக்கு உட்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி பயிலும் பள்ளி குழந்தைகள் தங்கள் கைகளில் வர்ணம் பூசி அதன் மூலம் தேசியக் கொடியை உருவாக்கி குடியரசு தின விழாவை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி பெண் குழந்தைகளுக்கு பள்ளியின் தாளாளர் ஃபைசல் அகமது தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து சொல்லி அவர்களோடு இனிமையாக உரையாடி பெண் குழந்தைகள் தினத்தையும் கொண்டாடினர். கடந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டும் இதேபோன்று பள்ளி குழந்தைகள் கைரேகை மூலம் தேசிய கொடியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!