Skip to content
Home » மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் காலமானார்……இ-தமிழ் நியூஸ் இரங்கல்

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் காலமானார்……இ-தமிழ் நியூஸ் இரங்கல்

திருச்சியை சேர்ந்தவர் ஐ சண்முகநாதன்(90).  இவர் 1953ம் ஆண்டு  தினத்தந்தி  பத்திரிகையில்  துணை ஆசிரியராக பணியை தொடங்கினார். தொடர்ந்து அவர் 70 ஆண்டுகளாக அந்த பத்திரிகையில் பணியாற்றி செய்தி ஆசியராக  உயர்ந்தார். இவர்  காலச்சுவடுகள் உள்பட ஏராளமான நூல்கள் எழுதி உள்ளார். 2022ம் ஆண்டில்  தமிழக அரசின் சார்பில் கலைஞரின் பேனா விருது பெற்றார்.  விளிம்பு நிலை மக்களுக்காக இவரது எழுத்து பணிஇருந்ததை பாராட்டி இந்த விருதினை முதல்வர் ஸ்டாலின் வழங்கி, ரூ.5 லட்சம் ரொக்கமும் அளித்து கவுரவித்தார்.

வயது மூப்பு காரணமாக சென்னை முகப்பேரில் உள்ள இல்லத்தில் சண்முகநாதன் இன்று  காலமானார். இவர் பல சிறுகதைகளும், தொடர்கதைகளும் எழுதி உள்ளார். மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் மறைவுக்கு இ.தமிழ் நியூஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!