Skip to content
Home » திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் 108 திவ்ய தேசத்தில் 15 வது ஸ்தலமான ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கமலவல்லிதாயார் சமேத ஹரசாபவிமோசனப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேதங்கள் மேளதாளம் முழங்க ஆராதனையோடு பரமபதவாசல் வழியாக பெருமாள் பக்தர்கள் கோவிந்தா கோவிந்த என்று முழங்க வெளியே வந்தார். தொடர்ந்து உள் பிரகாரங்கள் மேளதாள கச்சேரியுடன்

வலம் வந்தார். இதில் இந்து அறநிலைதுறை செயல் அலுவலர் பிருந்ததேவி, பட்டாச்சாரியர்கள், எழுத்தர்கள் பஞ்சநாதன்,செந்தில்குமார் மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் ஹரசாப விமோசனப் பெருமாள் கமலவல்லி தாயார் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!