Skip to content
Home » ஹாரீஜ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாட்டுடன் அனுமதி…

ஹாரீஜ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாட்டுடன் அனுமதி…

சென்னையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நாளை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 20,000 பார்வையாளர்கள் வரை பங்கேற்கும் இந்த மைதானத்தில் இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக்கூடாது என காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இசை நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருக்க வேண்டும். இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது. பார்வையாளர்களுக்கு தேவையான இருக்கைகளை ஏற்பாடு செய்யபட வேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு தேவையான பார்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி காட்சிகள்.
கடந்த மாதம் சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அதிகளவில் போலியான டிக்கெட் விற்பனை காரணமாக குளறுபடி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பல ரசிகர்களும் தங்களது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தினார்கள். இதனால், ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நீதிமன்ற வழக்கு வரை சென்றது. இதனைக் கருத்தில் கொண்டே, ஹாரிஸ் ஜெயராஸ் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு ’Noise and Grains’ நிறுவனம் விண்ணப்பித்திருந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!