Skip to content
Home » இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில், இன்று முதல் வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், 28-ந் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!