திருச்சி மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (மே.16) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திருச்சி ஜங்சன், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், கருமண்டபம், உறையூர், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, உய்யகொண்டான் திருமலை, வாசன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
