Skip to content
Home » கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  குறிப்பாக நன்னிலம்,  கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல, புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!