Skip to content
Home » இந்து மகா சபா தலைவரின் செக்யூரிட்டிக்கு தர்ம அடி…

இந்து மகா சபா தலைவரின் செக்யூரிட்டிக்கு தர்ம அடி…

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஆண்டாள் அவன்யூ பகுதியில் அகில பாரத இந்து மகா சபா தென்பாரத ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான கே சுபாஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் திடீரென அந்தப் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சுபாஷ் வீட்டில் செக்யூரிட்டாக வேலை பார்த்து வரும் கதிர்வேல் (வயது 68) என்பவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். அதில் அவருக்கு முகம், நெஞ்சு, கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் போலீசார் செக்யூரிட்டி கதிர்வேலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை தாக்கிய மர்ம நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாய உள்ளிட்ட உயரதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராயும் போது செக்யூரிட்டி கதிர்வேலை அடித்தது அதில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சுபாஷின் 2 கார்களை தீ வைத்த எரித்தும், அவரது வீட்டில் இருந்த வெளிநாட்டு நாயையும் மருந்து வைத்து கொலை செய்தும், மேலும் சுபாஷ் ஒரு முறை தாக்கம் முயன்றதும் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!