Skip to content
Home » கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து எரித்துக் கொன்ற மனைவி…. 2 பேர் கைது…

கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து எரித்துக் கொன்ற மனைவி…. 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் வனத்துறைக்கு சொந்தமான கல்லங்காடு முந்திரி காட்டில் எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கடந்த 30ஆம் தேதி கிடந்தது.
இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுவிசாரணை நடைபெற்று வந்தது . இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய வேல்முருகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர் விசாரணையில்

அரியலூர் மாவட்டம் வடகடல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் சென்னையில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அனுப்பிரியாவிற்கும் அவரது உறவினரான வேல்முருகன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த சுரேஷ் அனுபிரியாவை கண்டித்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த அனுப்ரியா

சென்னையில் இருந்த சுரேஷை ஏதோ காரணம் கூறி வரவழைத்துள்ளார்
சுரேஷ் வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த வேல்முருகன் அனுப்பிரியா உடன் சேர்ந்து சுரேஷை அரிவாளால் வெட்டி துடிதுடிக்க கொலை செய்துள்ளனர்.
பின்னர் வெண்மான் கொண்டான் முந்திரி காட்டில் சாக்கு பையில் மூட்டை கட்டி கடந்த 29ம் தேதி போட்டுள்ளனர்.
பின்னர் அடுத்த நாள் அதிகாலை உடையவர் தீயனூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிச் சென்று கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்ததன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது இதற்காக வேல்முருகன் வி. கைகாட்டி பகுதியில் ரூம் எடுத்து தங்கி உள்ளவர் அங்கு வேல்முருகன் அனுப்பிரியா ஆகிய இருவரும் வந்து செல்வது சிசி டிவி கேமராவில் பதிவாகி உள்ளது சிசிடிவி கேமரா பதிவு மற்றும் செல்போன் உரையாடல்களை வைத்து போலீசார் வேல்முருகனையும் அனுப்பிரியாவையும் உடையார்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!