Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உங்களை ஆள் பாஸ் செய்ததே நான் தான்… என்னை மறக்கலாமா.. இபிஎஸ் பிரச்சாரம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆல் பாஸ் போட்ட தங்களை மறக்கலாமா என இளைஞர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு வாக்களிப்பேன் என்று கூறுவது நியாயம் இல்லை என்றும் பேசி உள்ளார். “ஆல் பாஸ் போட்டது நானு, எல்லாருக்கும் பட்டம் கொடுத்த அரசாங்கம் அதிமுக, எங்களை மறக்கலாமா?” என EPS வாக்கு கேட்டு வருகிறார்.

தற்போது வாக்களிக்க கூடிய வயதில் இருக்கும் கொரோனா பேட்ச்-ஐ குறி வைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கரூர் சம்பவத்தை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்தார். திருவள்ளூர் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி ” தற்போது இன்னொரு கட்சி புதிதாக முளைத்திருக்கிறது. ஏம்பா தம்பிகளே, உங்களையெல்லாம் படிக்க வச்சது நாங்க.. ஆல்பாஸ் போட்டது நானு.. ஒருவருடம் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில், மனகுழப்பத்தில் நீங்கள் இருந்தீங்க. அந்த சமயத்தில் பள்ளியில் படித்து கொண்டிருந்த மாணவர்களை ஆல் பாஸ் செய்ததும் அதிமுக அரசு தான்: கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வு என வருடம் வீணாகாமல் பட்டம் வாங்கி கொடுத்ததும் எங்கள் அதிமுக அரசு தான்.. இது மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று குறிப்பிட்டார்.

உங்களுக்கு இப்படி நன்மைகளை செய்த எங்களை மறக்கலாமா.!! உங்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்தார்கள் எங்கள் ஆட்சியில் இருந்தவர்கள்.. காலுக்கு காலணி, புத்தகங்களை எடுத்து செல்வதற்கு பை, பள்ளிக்கு செல்வதற்கு சைக்கிள், அறிவை வளர்த்து கொள்ள மடிக்கணினி.. இப்படி மாணவர்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்த ஒரே அரசு அதிமுக அரசாங்கம் தான் என்றார்.

இப்படி எல்லா நன்மைகளையும் எங்கள் அரசிடமிருந்து வாங்கி அனுபவித்து விட்டு, பலனை கொண்டு போய் அங்கே கொடுக்கலாமா என்று பேசினார். செடி வைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி நன்கு பராமரித்து மரமாக்கி அது பூ பூத்து, காய் காய்த்து, அதிலிருந்து வரும் பழத்தை வேறு ஒருவர் பறித்தால் அதை யார் விடுவார்? அது நியாயமா?

செடியை மரமாக்கி பழம் வர வைக்க பாடுபட்டது யாரோ அவருக்கு தானே பலன்கள் கிடைக்க வேண்டும். வேறு ஒருவர் அதனை பெறுவது சரியா? எனவே இளைஞர்கள் வாக்களிக்கும் முன் இதையெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆட்சி செய்வது என்பது சாதாரண விஷயமல்ல, 8 கோடி மக்களின் வாழ்வாதாரம் அது. திரைப்படத்திற்கு போங்க, பாருங்க, ரசிங்க.. பின் அதை அதோடு விட்டு விட வேண்டும். நன்கு கனவு கண்ட பிறகு தூங்கி எழுந்தால் அந்த கனவு காணாமல் போய்விடும், அது போல் தான் திரையுலகமும். எனவே அதை நம்பி (விஜயை) ஓட்டு போட்டால், உங்கள் ஓட்டு தான் வீணாகும். திரைப்படத்தில் ஒரே ஆள் 50 பேரை அடிக்க முடியும், ஆனால் நிஜத்தில் முடியுமா?

இவரை பல பேர் துப்பாக்கியால் சுடலாம், ஆனால் ஒரு தோட்டா கூட இவர் மீது பாயாது. ஆனால் இவர் சுடுவது மட்டும் சரியாக எதிரிகள் மேல் பாயும். எனவே திரைப்படத்தை நம்பி ஏமாறாதீர்கள். ஒவ்வொரு இளஞர்களும் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

error: Content is protected !!