Skip to content
Home » திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

  • by Senthil

திருவாரூர் நகராட்சி  அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர்  புவனப்பிரியா செந்தில் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார்.  நகராட்சியில் சிறப்பாக  பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.  திருவாரூர் நகராட்சி அலுவலக மேலாளராக  பணியாற்றி வரும் முத்துக்குமாரின் 40 ஆண்டுகால சேவையை பாராட்டி அவருக்கு நகராட்சி தலைவர் புவனப்பிரியா செந்தில் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் நகராட்சி துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகர திமுக செயலாளர்  வாரை பிரகாஷ்  மற்றும் நகராட்சி அலுவலர்கள்  திரளாக கலந்து கொண்டனர். அவர்களும் முத்துக்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!