Skip to content
Home » இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர். முன்னதாக ராக்கெட் லாஞ்சிங், பல லட்ச கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கோள்களை காணும் வகையில் தொலைநோக்கி உருவாக்கும், சேட்டிலைட் சிக்னலை பள்ளியில் இருந்து ட்ராக்கிங் செய்தனர். தற்போது அதனைத் தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களே உருவாக்கிய சிறியதான சேட்டிலைட்டை பள்ளியிலிருந்து விண்ணுக்கு செலுத்தி சாதனை படைத்துள்ளனர். 1.63 கிலோ கிராம் எடை கொண்ட இந்த சிறிய ரக சேட்டிலைட்டினை பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சம் அடி உயரத்திற்கு ஹீலியம் பலூன் உதவியுடன் அனுப்பி அங்குள்ள தட்பவெப்ப நிலையை ஆராய்ந்து தகவலை அனுப்பும் வகையில் இதனை சென்னையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியும், சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவிகளும் ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேசனுடன் இணைந்து உருவாக்கி அனுப்பியுள்ளனர். இந்த செயற்கைக்கோளானது தொடர்ந்து 3 முதல் 8 மணி நேரம் தனது பயணத்தை விண்ணில் பயணம் செய்து தகவல்களை திரட்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டு பள்ளியில் இருந்து செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியில் இருந்து விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது நிகழ்வை அப்பகுதி மக்கள் மட்டும் இன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிகழ்வில், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார், பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!