Skip to content
Home » இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான பிரக்ஞானந்தா….

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான பிரக்ஞானந்தா….

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி அசத்தினார்.

இதன்மூலம் இந்திய தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதன்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஃபிடே-வின் மதிப்பீட்டு புள்ளிகள் படி பிரக்ஞானந்தா 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை முந்தி சாதனை படைத்தார். லைவ் ரேட்டிங் புள்ளிப் பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்ற நிலையில் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!