5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே ஐதராபாத், டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் விசாகப்பட்டினம், ராஜ்கோட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற நிலையில் முன்னணியில் இருந்தது.
4வது போட்டி ராஞ்சியில் நடந்து வந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 307 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. அடுத்து 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 145 ரன்களில் ஆட்டம் இழந்தது. அதைத்தொடர்ந்து நேற்று 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடியது. ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்த நிலையில் நேற்று 3வது நாள் ஆட்டம் முடிந்தது.
இன்று காலை 4ம் நாள் ஆட்டம் தொடங்கியது. 5 விக்கெட் இழந்த இந்திய அணி வெற்றி இலக்கான 192 ரன்களை சேர்த்தது. கேப்டன் ரோகித் 55 ரன்கள், கில்52, ஜூரெல் 39 ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ராஞ்சி டெஸ்டுடன், தொடரையும் கைப்பற்றியது. அடுத்த போட்டி தர்மசாலாவில் மார்ச் 7ம் தேதி தொடங்குகிறது.