Skip to content
Home » லீக்கில்…..தோல்வியே சந்திக்காத இந்திய அணி….. கோப்பையை வெல்லுமா?

லீக்கில்…..தோல்வியே சந்திக்காத இந்திய அணி….. கோப்பையை வெல்லுமா?

13வது உலக கோப்பை போட்டி கடந்த மாதம்  5ம் தேதி இந்தியாவில் அகமதாபாத்தில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில்  நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா – நெதர்லாந்து அணிகள்  மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 9 லீக் ஆட்டங்களில் விளையாடி, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் அனைத்தும் லீக் ஆட்டங்களில் குறைந்தது 2 தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இந்திய அணி மட்டுமே அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, நாளை மறுநாள் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுட அரை இறுதியில் மோத உள்ளது. கடந்த 2019-ல் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இதே நியூசிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்த இந்திய அணி, தற்போது அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என  இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

2வது அரையிறுதி போட்டி 16ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.   இறுதிப்போட்டி 19ம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி  இந்த முறை  இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு  கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!